காஞ்சிபுரம் டெம்பிள் சிட்டி மற்றும் ரேடியன்ஸ் ரோட்டரி சங்கங்கள் இணைந்து சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு மனிதச்சங்கிலியை காந்தி சாலை தேரடி பகுதியில் வெள்ளிக்கிழமை நடத்தினர்.
காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரி மாணவியர் பங்கேற்ற மனிதச்சங்கிலியை மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் கே.வி.கலைச் செல்வம் தொடங்கி வைத்தார். டெம்பிள் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் என்.சிலம்பரசன் தலைமை வகித்தார். செயலர் பி.ஜனகன், ரேடியன்ஸ் ரோட்டரி சங்கத் தலைவர் எம்.நிஷாப்ரியா, செயலர் மகாலெட்சுமி, கல்லூரி முதல்வர் ஆர்.ஸ்ரீமதி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், மாணவியர் சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.