கண் தான விழிப்புணர்வுக் கருத்தரங்கம்

காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் இந்திய மருத்துவக் கழகம் சார்பில் கண்தான விழிப்புணர்வுக் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் இந்திய மருத்துவக் கழகம் சார்பில் கண்தான விழிப்புணர்வுக் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தலைமை ஆசிரியர் வி.ஆர்.ஞானப்பிரகாசம் தலைமை வகித்தார். இந்திய மருத்துவக் கழக முன்னாள் தலைவர் பி.டி.சரவணன் முன்னிலை வகித்தார். கண் தானத்தின் அவசியம் குறித்து மருத்துவரும், இந்திய மருத்துவக் கழக காஞ்சிபுரம் மாவட்டத் துணைத் தலைவருமான ஆதிரை பேசினார். கண் மருத்துவம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்காக மருத்துவர் ஜி.சீனிவாசனுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் வி.ஆர்.ஞானப்பிரகாசம் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். 
இந்திய மருத்துவக் கழகப் பொருளாளர் எஸ்.மனோகரன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com