டெங்கு காய்ச்சல்: சிறுவன் பாதிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரில் 8 வயதுச் சிறுவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வியாழக்கிழமை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையி


காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரில் 8 வயதுச் சிறுவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வியாழக்கிழமை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரில் வாழைத்தோட்டத் தெருவில் வசித்து வரும் 8 வயதுச் சிறுவன் ஜியாவுதீன். இச்சிறுவன் கடந்த சில நாள்களாக மர்மக் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.இந்நிலையில் அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு டெங்கு பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் முடிவில்  ஜியாவுதீனுக்கு டெங்குகாய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பதாக தெரிய வந்தது.இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் அச்சிறுவனுக்கு தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com