செங்கல்பட்டில் கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய ஆர்எம்எல் அஞ்சல் ஓய்வூதியர் சங்கத்தினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு தலைமை தபால் நிலையம் வாயில் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத் தலைவர் ஸ்ரீராமுலு தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் வி.ஞானசம்பந்தம், மாவட்டப் பொருளாளர் என்.அருணாசலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.