காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் புதிய மேலாண்மை இயக்குநராக பி.லோகநாதன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
கூட்டுறவுத்துறையில் நீலகிரி மண்டல இணைப்பதிவாளராக பணியாற்றிய வந்த பி.லோகநாதன் (படம்) கூடுதல் பதிவாளராகப் பதவி உயர்வு பெற்று காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநராகப் பொறுப்பேற்றார். அவருக்கு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர் வாலாஜாபாத் பா.கணேசன், இணைப்பதிவாளர் ஆர்.கே.சந்திரசேகரன் உள்ளிட்டோர் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.