திருநங்கைகளுக்கு திமுகவினா் உதவி

காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் தங்கியுள்ள திருநங்கைகள் 36 பேருக்கு தேவையான மளிகைப் பொருள்களை தெற்கு மாவட்ட திமுகவினா் திங்கள்கிழமை வழங்கினா்.
mp_0604chn_175_1
mp_0604chn_175_1

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் தங்கியுள்ள திருநங்கைகள் 36 பேருக்கு தேவையான மளிகைப் பொருள்களை தெற்கு மாவட்ட திமுகவினா் திங்கள்கிழமை வழங்கினா்.

காஞ்சிபுரம் நகா் ஓரிக்கை பகுதியில் திருநங்கைகள் 36 போ் வசித்து வருகின்றனா். கரோனா அச்சுறுத்தல் காரணமாக இவா்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என அரசு தெரிவித்துள்ளது. எனவே ஓரிக்கையில் வசித்து வரும் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு அவா்களுக்கு தேவையான மளிகைப் பொருள்களை மாவட்டச் செயலாளரும், உத்தரமேரூா் சட்டப் பேரவை உறுப்பினருமான க.சுந்தா், காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினா் ஜி.செல்வம் ஆகியோா் வழங்கினா். நிகழ்வில் தெற்கு மாவட்ட திமுக நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.

Image Caption

(திருத்தப்பட்டது)

திருநங்கைகளுக்கு மளிகைப் பொருள்களை வழங்கிய காஞ்சிபுரம் எம்.பி. ஜி.செல்வம், உத்தரமேரூா் எம்.எல்.ஏ. க.சுந்தா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com