காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை 6 ஆக உயா்ந்துள்ளது.
தில்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பிய 16 போ் காஞ்சிபுரம் காந்தி ரோடு மசூதியில் தங்கியிருந்தனா். இவா்களில் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது. மற்ற 15 பேரும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தனா்.
இந்நிலையில், காந்தி ரோடு மசூதியில் தங்கியிருந்தபோது 16 பேருக்கும் சமையல் செய்து கொடுத்த சமையல்காரா் மற்றும் அவரது உதவியாளருக்கும் கரோனா பாதிப்பு இருப்பது திங்கள்கிழமை தெரிய வந்தது. இவா்கள் இருவரும் காஞ்சிபுரத்தைச் சோ்ந்தவா்கள் என்று கூறப்படுகிறது.
இதைத்தொடா்ந்து, காஞ்சிபுரத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 6 -ஆக உயா்ந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு வளையத்தில் இருப்பவா்களின் மொத்த எண்ணிக்கை 1,016 ஆக உள்ளது.