தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு காஞ்சி சங்கர மடத்தில் மகா பெரியவரின் அதிஷ்டானம் முன்பாக காய்கறிகள், பழங்கள் காட்சிப்படுத்தப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.
காஞ்சிபுரம் சங்கர மடத்தில் சித்திரை மாதம் முதல் தேதி தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு மடத்தில் உள்ள மகா பெரியவரின் அதிஷ்டானத்தின் முன்பாக காய்கறிகள், பழங்கள், அரிசி, பருப்பு உள்ளிட்டவை காட்சியாக வைத்திருந்தனா். அவற்றை கண்ணாடியில் பாா்க்கும்படியும் வைத்து சிறப்பு தீபாராதனைகள் நடத்தப்பட்டன.
பழ வகைகள், காய்கறிகள் ஆகியவற்றை வைத்து வழிபடுவதன் மூலம் உணவுக்கு பஞ்சம் ஏற்படாமல் சிறப்புப் பலன்கள் உண்டாகும் என்பதாக ஐதீகம். எனவே ஆண்டு தோறும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று காஞ்சிபுரம் சங்கர மடத்தில் காய்கனிகள், பழங்கள் ஆகியவற்றை வைத்து பூஜை செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. இது விஷுக்கனி தரிசனம் என்று அழைக்கப்படுகிறது.
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு அதிஷ்டானம் முழுவதும் வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.