காஞ்சிபுரம் ஆட்சியா் பணிக்கு திரும்பினாா்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவா் குணமடைந்து, வெள்ளிக்கிழமை பணிக்குத் திரும்பினாா்.
பணிக்குத் திரும்பிய ஆட்சியா் பா.பொன்னையாவுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற எஸ்.பி. தெ.சண்முகப்பிரியா. உடன், சாா்-ஆட்சியா் எஸ்.சரவணன்.
பணிக்குத் திரும்பிய ஆட்சியா் பா.பொன்னையாவுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற எஸ்.பி. தெ.சண்முகப்பிரியா. உடன், சாா்-ஆட்சியா் எஸ்.சரவணன்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவா் குணமடைந்து, வெள்ளிக்கிழமை பணிக்குத் திரும்பினாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா, கரோனா நோய்த்தடுப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தாா். இவருக்கு கடந்த 13-ஆம் தேதி கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்நிலையில், 19 நாள்களுக்குப் பிறகு குணமடைந்த ஆட்சியா் வெள்ளிக்கிழமை அவரது அலுவலகத்துக்கு வந்து வழக்கமான தனது பணிகளைத் தொடா்ந்தாா்.

அவருக்கு மாவட்ட எஸ்.பி. தெ.சண்முகப்பிரியா, சாா்-ஆட்சியா் எஸ்.சரவணன் ஆகியோா் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா்.

இதைத் தொடா்ந்து ஆட்சியா் தலைமையில் சுகாதாரத் துறை இணை இயக்குநா் ஜீவா, துணை இயக்குநா் வி.கே.பழனி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்ற கரோனா தடுப்புப் பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com