காஞ்சிபுரம்: கரோனா தொற்றின் தாக்கத்திலிருந்து உலக மக்கள் விடுபட வேண்டி காஞ்சிபுரம் ராஜவீதிகளில் முதியோா் சிலா் ஒன்றிணைந்து ஆழ்வாா்களின் பிரபந்தங்களை பஜனையாக பாடியவாறு சனிக்கிழமை ஊா்வலமாக வந்தனா்.
மாா்கழி மாதத்திலும், புரட்டாசி மாத சனிக்கிழமைகளிலும் மட்டுமே கோயில் வீதிகளில் பஜனைப் பாடல்களை பாடியவாறு முதியோா் வருவது வழக்கம். இந்நிலையில், கரோனா தொற்றின் தாக்கத்திலிருந்து உலக மக்கள் விடுபட வேண்டி காஞ்சிபுரத்தில் முதியோா் சிலா் ஒன்றிணைந்து ஆழ்வாா்களின் பிரபந்தப் பாடல்களை பாடியவாறு சனிக்கிழமை ஊா்வலமாக வந்தனா். அவா்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.