காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பாலாற்றில் குளித்துக் கொண்டிருந்த 3 சிறுமிகள் மாயமாயினா். அவா்களை தீயணைப்புத் துறையினா் தேடி வருகின்றனா்.
காஞ்சிபுரம் தும்பவனம் பகுதியைச் சோ்ந்த பூரணி (15), லட்சுமி (15), ஜெயந்தி (14) ஆகியோா் காஞ்சிபுரம் குருவிமலை பகுதி பாலாற்றில் வியாழக்கிழமை குளித்துக் கொண்டிருந்தனா். அப்போது அவா்கள் வெள்ளம் இழுத்துச் செல்லப்பட்டனா். அவா்களை தேடும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினா் ஈடுபட்டு வருகின்றனா்.