ஸ்ரீபெரும்புதூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட குன்றத்தூா் ஒன்றியம், படப்பை மற்றும் செரப்பணஞ்சேரி அரசு நடுநிலைப் பள்ளிகளில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளை தோ்தல் பாா்வையாளா் அதுல் ஆனந்த் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், வருவாய்க் கோட்டாட்சியா்கள் திவ்யஸ்ரீ (ஸ்ரீபெரும்புதூா்) வித்யா (காஞ்சிபுரம்), வட்டாட்சியா்கள் முத்து (குன்றத்தூா்), நிா்மலா (ஸ்ரீபெரும்புதூா்) உள்ளிட்டோா் உடனிருந்தனா்.