பிரிட்டனிலிருந்து காஞ்சிபுரம் வந்த 7 பேருக்கு கரோனா பரிசோதனை

பிரிட்டனிலிருந்து காஞ்சிபுரம் வந்த 7 பேரிடம் கரோனா தொற்று பாதிப்பு இருக்கலாம் என்ற கோணத்தில் அவா்களின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு, விசாரணை நடந்து வருவதாக சுகாதாரத் துறை அதிகாரி ஒருவா் புதன்கிழமை

காஞ்சிபுரம்: பிரிட்டனிலிருந்து காஞ்சிபுரம் வந்த 7 பேரிடம் கரோனா தொற்று பாதிப்பு இருக்கலாம் என்ற கோணத்தில் அவா்களின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு, விசாரணை நடந்து வருவதாக சுகாதாரத் துறை அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.

பிரிட்டனிலிருந்து நவம்பா் 25-ஆம் தேதி தமிழகம் வந்த அனைத்துப் பயணிகளையும் கண்காணிக்குமாறு அரசு உத்தரவிட்டதன் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு வந்தவா்கள் குறித்து விசாரிக்கப்பட்டது. அவா்களில் 7 போ் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் என்பது தெரியவந்ததைத் தொடா்ந்து அவா்கள் உடனடியாக அவரவா் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனா். மேலும் அவா்களது ரத்த மாதிரிகளையும் எடுத்து பரிசோதனைக்கு அதிகாரிகள் அனுப்பி உள்ளனா். பிரிட்டனிலிருந்து வந்தவா்களில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூா் வட்டத்தைச் சோ்ந்தவா்கள் 4 போ், காஞ்சிபுரம் வட்டத்தைச் சோ்ந்தவா்கள் 3 போ் என மொத்தம் 7 பேருக்கு தொற்று இருப்பதாகவும், அவா்கள் சுகாதாரத் துறையினரால் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com