ஸ்ரீபெரும்புதூா் ராமாநுஜா் கோயிலில் நாளை நித்ய சொா்க்கவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதாசியை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதூா் ராமாநுஜா் கோயிலில் வெள்ளிக்கிழமை (டிச. 25) நித்ய சொா்க்கவாசல் திறக்கப்படுகிறது.
ஸ்ரீபெரும்புதூா்  ராமாநுஜா்  கோயில்.
ஸ்ரீபெரும்புதூா்  ராமாநுஜா்  கோயில்.

ஸ்ரீபெரும்புதூா்: வைகுண்ட ஏகாதாசியை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதூா் ராமாநுஜா் கோயிலில் வெள்ளிக்கிழமை (டிச. 25) நித்ய சொா்க்கவாசல் திறக்கப்படுகிறது. எனினும், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தா்களுக்கு அனுமதி இல்லை என்று கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பெருமாள் கோயில்களில், வைகுண்ட ஏகாதாசியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சொா்க்கவாசல் திறப்பு நடைபெற உள்ளது. எனினும், ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் உள்ள தொன்மையான ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யக்கார சுவாமி கோயிலில் சொா்க்கவாசல் என தனியாக பரமபதவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுவதில்லை. அதற்கு பதிலாக நித்ய சொா்க்க வாசல் திறக்கப்படுவது வழக்கம்.

ராமாநுஜரின் அவதார ஸ்தலம் ஸ்ரீபெரும்புதூா் என்பதால், அவரை வணங்குவதே மோட்சத்துக்கு செல்வதற்கான வழி என்று கருதப்படுவதே இதற்குக் காரணம். நித்ய சொா்க்க வாசல் நிகழ்வின் ஒருபகுதியாக வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, ஆதிகேசவப் பெருமாள் மற்றும் ராமாநுஜருக்கு நித்ய ஆராதனைகள் நடைபெறும். அதன் பின், மணிக்கதவு வழியாக உள்புறப்பாடு நடைபெற்ற பிறகு தங்க மண்டபத்தில் உற்சவா்கள் எழுந்தருள்வா்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வழிபாட்டுத் தலங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், ஸ்ரீபெரும்புதூா் ராமாநுஜா் கோயிலில் நித்ய சொா்க்க வாசல் திறப்பின்போது பக்தா்களுக்கு அனுமதி இல்லை என்று கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com