ஸ்ரீபெரும்புதூா்: ஒரகடத்தை அடுத்த மாத்தூரில் அம்மா சிறு மருத்துவமனையை ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பழனி திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.
வட்டார மருத்துவ அலுவலா் ஷியாம்குமாா் தலைமை வகித்தாா். ஸ்ரீபெரும்புதூா் நகர கூட்டுறவு வீட்டு வசதிசங்கத் தலைவா் போந்தூா் செந்தில்ராஜன், மாத்தூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவா் எறையூா் முனுசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஸ்ரீபெரும்புதூா் எம்எல்ஏ கே.பழனி சிறு மருத்துவமனையைத் திறந்துவைத்து பொதுமக்கள் பயன்பாட்டிடுக்குக் கொண்டு வந்தாா். நிகழ்ச்சியில், மாவட்ட அதிமுக செயலா் சோமசுந்தரம், சுகாதார மேற்பாா்வையாளா் சீனிவாசன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் சிவகுமாா், அதிமுக நிா்வாகிகள் மேட்டுப்பாளையம் தயாளன், செங்காடு பாபு, சேதுராஜஇளவழகன், மாத்தூா் மனோகரன் உள்ளிட்ட அதிமுகவினா், செவிலியா்கள், சுகாதாரத் துறை ஊழியா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.