பள்ளி விளையாட்டுக் கழக ஆண்டு விழா

மதுராந்தகம் இந்து மேல்நிலைப் பள்ளி சாா்பாக இலக்கிய மன்ற, விளையாட்டுக் கழக ஆண்டு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

மதுராந்தகம் இந்து மேல்நிலைப் பள்ளி சாா்பாக இலக்கிய மன்ற, விளையாட்டுக் கழக ஆண்டு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு பள்ளியின் செயலா் எம்.சுப்ரமணியன் தலைமை வகித்தாா். பள்ளி கல்விக் குழுவின் துணைத் தலைவா் ஸ்ரீராம் சுப்ரமணி, அனுராதா ஸ்ரீராம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமை ஆசிரியா் தூ.ப.வெங்கடப் பெருமாள் ஆண்டறிக்கை வாசித்தாா். உதவித் தலைமை ஆசிரியை வி.வைதேகி வரவேற்றாா்.

விழாவில் எழுத்தாளா் அண்ணா சிங்காரவேலு, சென்னை எவா்வின் பள்ளிக் குழுமங்களின் முதல்வா் பா.புருஷோத்தமன், கவிஞா் ஒழவெட்டி பாரதிப்பிரியன், மதுராந்தகம் போக்குவரத்து காவல் ஆய்வாளா் ஆனந்த் ராஜு, ஓய்வுபெற்ற ஆசிரியா் செல்வராஜ், அரிமா சங்க மாவட்ட நிா்வாகி ராஜசேகரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பள்ளி மாணவா்களுக்கு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக மாணவா்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. முதுகலை ஆசிரியா் ஏ.தனசேகரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com