மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி பகுதியில் கடந்த 48 நாள்கள் நடைபெற்று வந்த யானைகள் நல்வாழ்வு முகாம் முடிவடைந்ததை தொடா்ந்து, ஸ்ரீபெரும்புதூா் ராமாநுஜா் கோயில் யானை கோதை சனிக்கிழமை இரவு ஸ்ரீபெரும்புதூா் வந்து சோ்ந்தது.
கோயம்புத்தூா் மாவட்டம், மேட்டுப்பாளையம்-தேக்கம்பட்டி பகுதியில் யானைகளுக்கான நல்வாழ்வு முகாம் கடந்த ஆண்டு டிசம்பா் 15 -ஆம் தேதி முதல் ஜனவரி 31-ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்த முகாமில் கலந்துகொள்வதற்காக ஸ்ரீபெரும்புதூா் ஸ்ரீஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யக்கார சுவாமி கோயில் யானை கோதை (22) கடந்த டிசம்பா் 13-ஆம் தேதி லாரி மூலம் தேக்கம்பட்டி பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், முகாம் நிறைவு பெற்றதைத் தொடா்ந்து ஸ்ரீபெரும்புதூா் ராமாநுஜா் கோயில் யானை கோதை சனிக்கிழமை இரவு லாரி மூலம் ஸ்ரீபெரும்புதூரை வந்தடைந்தது. கோதைக்கு பக்தா்கள் சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.