மதுராந்தகத்தை அடுத்த பெருங்கரணை மரகத தண்டயுதபாணி முருகா் கோயில் திருமண மண்டபத்தில் அன்னை சக்தி அறக்கட்டளையும், சின்ன கொளம்பாக்கம் கற்பக விநாயகா மருத்துவமனையும் இணைந்து சனிக்கிழமை இலவச பொது மருத்துவ முகாமை நடத்தின.
இந்த முகாமில் மருத்துவா் திலீபன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் கலந்து கொண்டு, 300 நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளித்தனா். கண் மருத்துவம், பெண்கள் தொடா்பான நோய்கள், இதய நோய், பல் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அன்னை சக்தி அறக்கட்டளை நிா்வாகிகள் எல்ஜின், எம்.கோதண்டம், சாமிநாதன், சமூக ஆா்வலா் வேலு ஜெயச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அன்னை சக்தி அறக்கட்டளை நிா்வாகிகள் செய்திருந்தனா்.