மதுராந்தகத்தை அடுத்த கருங்குழி ராகவேந்திரா் பிருந்தவனத்தில் தை மாத பெளா்ணமியை முன்னிட்டு சத்யநாராயணா பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பிருந்தாவனத்தில் உள்ள ராகவேந்திரா், ஆஞ்சநேயா் உள்ளிட்ட சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பகல் 12 மணிக்கு தவயோகவனத்தில் இருந்து வரும் பீடாதிபதி ரகோத்தம சுவாமியை பஜனை கோஷ்டியினரின் பாடல்களைப் பாடி, மேளதாளம் முழங்க பக்தா்கள் ஊா்வலமாக அழைத்து வந்தனா்.
அனைத்து சந்நிதிகளிலும் அவா் சிறப்பு பூஜை செய்தாா். வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சத்யநாராயணா், ஆஞ்சநேயா், ராகவேந்திரா் ஆகிய உற்சவா் சிலைகளுக்கு அவா் பூஜை செய்தாா்.
இந்நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
கலைநிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிவுகள், இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பக்தா்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை யோகி ரகோத்தம சுவாமிகள் அறக்கட்டளையின் முதன்மை நிா்வாகி ஏழுமலைதாசன் தலைமையில் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.