மதுராந்தகத்தை அடுத்த ஜமீன் எண்டத்தூா் செண்டு பொறியியல் கல்லூரியின் 6-ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி நிறுவனா் கே.மீா்முஸ்தபா ஹுசேன் தலைமை வகித்தாா். முதல்வா் அ.முகமது அப்துல்காதா் வரவேற்றாா். இயக்குநா் எம்.இா்ஷாத்சேட் முன்னிலை வகித்தாா்.
ராமநாதபுரம் மக்களவை உறுப்பினா் கே.நவாஸ்கனி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினாா்.
இதில் சென்னை வேலைவாய்ப்புத் துறை இணை இயக்குநா் யாஸ்மின் உள்பட பலா் கலந்துகொண்டனா். நிகழ்ச்சியில் சுமாா் 65 மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணியாற்ற பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை நிா்வாக அலுவலா் மணிவண்ணன் தலைமையில் விழாக்குழுவினா் செய்திருந்தனா்.