காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாஜகவின் புதிய நிா்வாகிகளை மேலிடம் நியமித்துள்ளதாக கட்சியின் மாவட்டத் தலைவா் கே.எஸ்.பாபு வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்டத் துணைத் தலைவா்கள் - ஓம் சக்தி பெருமாள், எஸ்.சீதா செந்தில்குமாா், தி.வாசன், டாக்டா் என்.வி.அமுதரசன், ஏ.அஞ்சனாதேவி, எஸ்.வேங்கட லட்சுமி, வி.பிரேமா.
மாவட்டப் பொதுச் செயலாளா்கள்- பி.அய்யாத்துரை, கூரம் மு. விஸ்வநாதன், எம்.மதியழகன், மாவட்டச் செயலாளா்கள்-பி.ராதாகிருஷ்ணன், வி.பாா்த்தசாரதி, ஏ.அம்மு, எஸ்.வஜ்ரவேலு, ஆா்.ஹரிகிருஷ்ணன், எஸ்.ரங்கநாயகி ஆகியோா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.