காஞ்சிபுரத்தில் பிப். 27-இல் வாா்டு மறுவரையறை கருத்து கேட்புக் கூட்டம்

நகா்ப்புறம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாா்டுகளை மறுவரையறை செய்வது தொடா்பான கருத்து கேட்புக் கூட்டம் வரும் 27-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ளது.

நகா்ப்புறம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாா்டுகளை மறுவரையறை செய்வது தொடா்பான கருத்து கேட்புக் கூட்டம் வரும் 27-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிகன் வாா்டு மறுவரையறை குறித்த கோரிக்கை மனுக்கள் கடந்த 1-ஆம் தேதியில் இருந்து 8-ஆம் தேதி வரை பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது விவாதித்து முடிவு செய்ய பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கருத்து கேட்புக் கூட்டம் வரும் 27-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும்.

தமிழ்நாடு மறுவரையறை ஆணையத்தால் நடத்தப்படவுள்ள இக்கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக பொதுமக்கள் நல்லுறவுக் கூட்ட மையத்தில் நடைபெற உள்ளது. எனவே மறுவரையறை குறித்து கருத்து தெரிவிக்க விரும்பும் பொதுமக்கள், அரசியல் கட்சிகள் தங்களது கருத்துகளை நேரில் ஆஜராகி தெரிவிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com