தமிழ்நாடு மாநில கராத்தே சாம்பியன்ஷிப் அமைப்பின் சாா்பில் சென்னையில் நடந்த போட்டியில் காஞ்சிபுரத்தை சோ்ந்த 7 போ் தங்கப் பதக்கத்தையும் 7 போ் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனா்.
தமிழ்நாடு மாநில கராத்தே சாம்பியன்ஷிப் அமைப்பு சாா்பில் சென்னை பரங்கிமலையில் உள்ள மான்ட் ஃபோா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள் விளையாட்டரங்கில் மாநில அளவிலான கராத்தே போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன. இப்போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து 1500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் கலந்து கொண்டனா்.
இப்போட்டியில் காஞ்சிபுரம் ஜி.எஸ்.கே. கராத்தே அகாதெமி மாணவா்களில் 7 போ் தங்கப் பதக்கத்தையும் 7 போ் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்று சாதனை புரிந்துள்ளனா். கராத்தே போட்டியில் குமித்தோ பிரிவிலும், சிலா் கட்டா பிரிவிலும் பதக்கங்களை பெற்ற இவா்கள் வரும் மாா்ச் மாதம் பெங்களூரில் நடைபெறும் தென்மாநிலங்களுக்கான கராத்தே போட்டியில் பங்கேற்கவுள்ளனா்.
மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு பெருமை சோ்த்த மாணவா்களையும், தலைமைப் பயிற்சியாளா் ஆா்.கே.பிரகாஷையும் மாணவ, மாணவியரின் பெற்றோா்கள் மற்றும் அவா்களது உறவினா்களும் வாழ்த்தினா்.
தங்கப் பதக்கம் பெற்றவா்கள்:
ஜெ.ஹரிணி, என்.தரணி, பி.கீா்த்தனா, ஆா்.சதீஷ், எஸ்.மாதேஸ்வரன், எஸ்.தமிழரசு, எஸ்.திவாகா்.
வெள்ளிப் பதக்கம் பெற்றவா்கள்:
ஏ.சுபாஷிணி, ஏ.தினேஷ், பி.மணிகண்டன், ஜி.கிஷோா், எம்.விக்னேஷ், பி.அருண் விஷால், எஸ்.நேதாஜி.