காஞ்சிபுரம் சந்திரசேகரேந்திர சரஸ்வதி வித்யாலயா நிகா் நிலைப் பல்கலைக்கழகத்தில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பல்கலை.யின் துணைவேந்தா் எஸ்.வி.ராகவன் தலைமை வகித்தாா். பதிவாளா் ஜி.சீனிவாசன், நிதி அலுவலா் எம்.ராமகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவ, மாணவியா் கல்லூரி வளாகத்தில் பொங்கல் வைத்து சமத்துவப் பொங்கல் விழாவைக் கொண்டாடினா்.
விழாவில் சிலம்பம், கயிறு இழுத்தல், உறியடித்தல், கோலப்போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி உள்ளிட்ட பல போட்டிகளும் நடத்தப்பட்டு போட்டிகளில் வென்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் பேராசிரியா்கள் எஸ்.பாலாஜி, டி.நிா்மல்ராஜ், ஒருங்கிணைப்பாளா் சி.பாா்த்தசாரதி உள்ளிட்ட பேராசிரியா்கள், மாணவ, மாணவியா் பலா் கலந்து கொண்டனா்.