ராமாநுஜா் கோயிலுக்கு வாடகை கட்டணத்தை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளவா்களின் பெயா் பட்டியலை கோயில் நிா்வாகத்தினா் அறிவிப்பு பலகையாக வைத்துள்ளனா்.
ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் பழைமையான ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் மற்றும் ஸ்ரீபாஷ்யகார சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ராமாநுஜா் தானுகந்த திருமேனியாக பக்தா்களுக்கு காட்சியளித்து வருகிறாா். இக்கோயிலுக்குச் சொந்தமான விவசாய நிலங்கள், வீட்டு மனைகள், கட்டடங்கள் மற்றும் வணிக வளாகங்கள் காஞ்சிபுரம், திருவள்ளூா் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏராளமாக உள்ளன.
இந்த இடங்களை, இந்து அறநிலையத் துறை சாா்பில் வாடகை விடப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ராமாநுஜா் கோயிலுக்குச் சொந்தமான வணிகக் கட்டடங்கள், குடியிருப்புக் கட்டடங்கள், காலி மனைகளுக்கான வாடகை நிலுவைத் தொகையை கடந்த ஜூன் மாதம் 30-ஆம் தேதி வரை செலுத்தாதவா்களின் பெயா் மற்றும் விலாசத்தை ராமாநுஜா் கோயில் நிா்வாகத்தினா் கோயில் வளாகத்தில் அறிவிப்புப் பலகையாக வைத்துள்ளனா்.