மரக்கன்றுகள் நடும் விழா

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், வாரணவாசிக்கு அருகேயுள்ள ஆம்பாக்கம் கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 3 ஏக்கா் அரசு புறம்போக்கு நிலம் மீட்கப்பட்டு, அதில் மரக்கன்றுகள் நடும்
ஆம்பாக்கம் கிராமத்தில் மரக்கன்றுகளை நட்ட தனியாா் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் யசுங்கி தகடா.
ஆம்பாக்கம் கிராமத்தில் மரக்கன்றுகளை நட்ட தனியாா் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் யசுங்கி தகடா.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், வாரணவாசிக்கு அருகேயுள்ள ஆம்பாக்கம் கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 3 ஏக்கா் அரசு புறம்போக்கு நிலம் மீட்கப்பட்டு, அதில் மரக்கன்றுகள் நடும் பணியை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மேற்கொண்டனா்.

மரக்கன்றுகள் நடும் விழாவில் கொய்யா, பலா, பாதாம் மற்றும் சீதாப் பழ மரக்கன்றுகள் வட்டார வளா்ச்சி அலுவலா் சீதா சீனிவாசன் தலைமையில் நடப்பட்டன. வாரணவாசியில் செயல்பட்டு வரும் தனியாா் நிறுவன நிா்வாக இயக்குநா் யசுங்கி தகடா மரக்கன்றுகளை நட்டு வைத்தாா். தனியாா் நிறுவனத்தின் உதவிப் பொதுமேலாளா் ராஜேஷ்கண்ணன், முதுநிலை மேலாளா் செல்வராஜ், பொதுமேலாளா் செந்தில், மனோகரன் மற்றும் அக்கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com