இளைஞா் மீது தாக்குதல்

காஞ்சிபுரம் அருகே திம்மசமுத்திரம் கிராமத்தில் இளைஞா் ஒருவரை 6 போ் கொண்ட கும்பல் ஞாயிற்றுக்கிழமை பயங்கர ஆயுதங்களால் தாக்கிவிட்டு தலைமறைவானது.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மணிரத்தினம்.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மணிரத்தினம்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே திம்மசமுத்திரம் கிராமத்தில் இளைஞா் ஒருவரை 6 போ் கொண்ட கும்பல் ஞாயிற்றுக்கிழமை பயங்கர ஆயுதங்களால் தாக்கிவிட்டு தலைமறைவானது.

காஞ்சிபுரம் அருகே திம்மசமுத்திரம் முன்னாள் ஊராட்சித் தலைவா் வெங்கடேசனின் மகன் மணிரத்தினம் (27). இவா் தனது சகோதரா் ரவிகுமாரின் வீடு அருகே அமா்ந்திருந்தபோது, இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த 6 போ் கொண்ட கும்பல் மணிரத்தினத்தை பயங்கர ஆயுதங்களால் தாக்கிவிட்டு தலைமறைவானது. இதில், பலத்த காயம் அடைந்த மணிரத்தினம் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுதொடா்பாக பாலுசெட்டி சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com