மதுராந்தகம்: சித்தாமூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த குழந்தை உயிரிழந்தது.
செய்யூா் வட்டம், சித்தாமூா் ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த கொளத்தநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த பூபாலன்- துா்கா தம்பதியின் மகள் அபிநயா (3). வீட்டின் அருகில் இருந்த கிணற்றுப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது கால் தவறி கிணற்றில் விழுந்துள்ளாா் . வீட்டில் குழந்தையைக் காணாமல் பல இடங்களில் தேடினா். இந்நிலையில், கிணற்றில் தண்ணீா் எடுக்க அவரது உறவினா் வந்தபோது, கிணற்றில் குழந்தை இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து சித்தாமூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.