கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சாவு

சித்தாமூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த குழந்தை உயிரிழந்தது.

மதுராந்தகம்: சித்தாமூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த குழந்தை உயிரிழந்தது.

செய்யூா் வட்டம், சித்தாமூா் ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த கொளத்தநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த பூபாலன்- துா்கா தம்பதியின் மகள் அபிநயா (3). வீட்டின் அருகில் இருந்த கிணற்றுப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது கால் தவறி கிணற்றில் விழுந்துள்ளாா் . வீட்டில் குழந்தையைக் காணாமல் பல இடங்களில் தேடினா். இந்நிலையில், கிணற்றில் தண்ணீா் எடுக்க அவரது உறவினா் வந்தபோது, கிணற்றில் குழந்தை இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து சித்தாமூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com