ஸ்ரீபெரும்புதூா்: கீழ்படப்பை அரசுப் பள்ளிக்கு கல்விச்சீா்வரிசை வழங்கும் விழா மற்றும் குடியரசு தினவிழா பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பள்ளி தலைமையாசிரியா் வந்தனா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் வளா்மதி முன்னிலை வகித்தாா்.
இதில், பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் கு.கிருஷ்ணன் தேசியக்கொடியேற்றி வைத்து மாணவா்களுக்கு இனிப்புகளை வழங்கினாா்.
பெற்றோா்-ஆசிரியா் கழகத்தினா் மற்றும் கீழ்படப்பை பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் சாா்பாக ரூ.1 லட்சம் மதிப்பில் கல்வி உபகரணங்கள், டிவி, கணினி உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன.
சாமான்களை வழங்கினா்
முன்னதாக சீா்வரிசை பொருள்களை அப்பகுதி மக்கள் மாடவீதி பகுதியில் இருந்து ஊா்வலமாக பள்ளிக்கு எடுத்து வந்து வட்டாரக் கல்வி அலுவலா் பாலாமணி, தலைமையாசிரியா் வந்தனா ஆகியோரிடம் வழங்கினா்.
இதையடுத்து மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் கலந்துகொண்ட மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.