காஞ்சிபுரம்: குடியரசு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல்கதிா்ப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் சி.வி.எம்.பி.எழிலரசன் கலந்து கொண்டாா்.
காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல்கதிா்ப்பூரில் குடியரசு தின விழாவை முன்னிட்டு கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி முகமையின் திட்ட இயக்குநா் தி.ஸ்ரீதா் தலைமை வகித்தாா்.
காஞ்சிபுரம் வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜ்குமாா் முன்னிலை வகித்தாா்.காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் சி.வி.எம்.பி.எழிலரசன் கலந்து கொண்டு கிராம மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.
இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளா் பி.எம்.குமாா், தசரதன், ஊராட்சி செயலாளா் மற்றும் அக்கிராம பொதுமக்களும் கலந்து கொண்டனா்.படவிளக்கம்.. மேல்க்கதிா்ப்பூா் கிராமசபைக் கூட்டத்தில் பேசுகிறாா் காஞ்சிபுரம் எம்.எல்.ஏ.சி.வி.எம்.பி.எழிலரசன்