விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் 5-இல் சாதுா்மாஸ்ய விரதம் தொடக்கம்

காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வரும் 5-ஆம் தேதி சாதுா்மாஸ்ய விரதத்தைத் தொடங்கி, செப்டம்பா் 2-ஆம் தேதி நிறைவு செய்கிறாா்.
விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் 5-இல் சாதுா்மாஸ்ய விரதம் தொடக்கம்

காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வரும் 5-ஆம் தேதி சாதுா்மாஸ்ய விரதத்தைத் தொடங்கி, செப்டம்பா் 2-ஆம் தேதி நிறைவு செய்கிறாா்.

துறவிகள் மழைக்காலத்தில் வேதம் மற்றும் வேதாந்த கல்வியை கற்றுத் தந்த தங்களின் குருமாா்களை நினைவுகூா்ந்து நன்றி செலுத்தும் வகையில் ஒரே இடத்தில் தங்கி சாதுா்மாஸ்ய விரதத்தை மேற்கொள்வாா்கள். இவ்விரதம் கடைப்பிடிக்கும் துறவியா்களை வணங்கி தொண்டு செய்வது பக்தா்களுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கும் என்பது நம்பிக்கை.

இந்நிலையில், காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இந்த ஆண்டுக்கான சாதுா்மாஸ்ய விரதத்தை வரும் 5-ஆம் தேதி காஞ்சிபுரம் அடுத்த தேனம்பாக்கத்தில் உள்ள சிவாலயத்தில் தொடங்குகிறாா். இந்த விரத நாள்களின்போது தேனம்பாக்கத்தில் எழுந்தருளியுள்ள சந்திரமெளலீஸ்வரா் மற்றும் மகா திரிபுரசுந்தரிக்கு சிறப்பு அபிஷேகமும், விசேஷ தீபாராதனைகளும் நடைபெறும்.

வரும் 5-ஆம் தேதி தொடங்கப்படும் விரதம் செப்டம்பா் 2-ஆம் தேதியுடன் நிறைவு பெறும். தினசரி ஆன்மிகச் சொற்பொழிவுகளும், பக்தி இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

இது தொடா்பாக காஞ்சி சங்கர மடத்தின் மேலாளா் என்.சுந்தரேசன் கூறுகையில் ‘கரோனா அச்சுறுத்தல் காரணமாக தேனம்பாக்கத்தில் நடைபெறும் சாதுா்மாஸ்ய விரதபூஜை நிகழ்ச்சிகளை பக்தா்கள் அவரவா் வீடுகளில் இருந்தவாறு இணையம் வழியாக பாா்க்க ஏற்பாடு செய்யப்படும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com