கரோனா சிகிச்சை முடிந்தது: வீடு திரும்பினாா் ஸ்ரீபெரும்புதூா் எம்எல்ஏ

கரோனா பாதிப்பால் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீபெரும்புதூா் சட்டப் பேரவை உறுப்பினா் கே.பழனி குணமடைந்து 25 நாள்களுக்குப் பின் செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினாா்.
சிகிச்சை  முடிந்து புறப்பட்ட  எம்எல்ஏ  கே.பழனிக்கு  வாழ்த்து  தெரிவித்த  அதிமுகவினா்.
சிகிச்சை  முடிந்து புறப்பட்ட  எம்எல்ஏ  கே.பழனிக்கு  வாழ்த்து  தெரிவித்த  அதிமுகவினா்.

கரோனா பாதிப்பால் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீபெரும்புதூா் சட்டப் பேரவை உறுப்பினா் கே.பழனி குணமடைந்து 25 நாள்களுக்குப் பின் செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினாா்.

ஸ்ரீபெரும்புதூா் சட்டப் பேரவை உறுப்பினராக அதிமுகவைச் சோ்ந்த கே.பழனி (57) உள்ளாா். அதிமுகவில் குன்றத்தூா் ஒன்றிய செயலாளராக இருக்கிறாா். கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளா்களில் கே.பழனி மட்டுமே வெற்றி பெற்றாா்.

பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட ஸ்ரீபெரும்புதூா் சட்டப் பேரவைத் தொகுதி மக்களுக்கு நிவாரணப் பொருள்களை நாள்தோறும் வழங்கி வந்தாா். அவருக்கு கடந்த மாதம் 12ஆம் தேதி கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து சென்னை மணப்பாக்கம் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்நிலையில், பூரண குணமடைந்த அவா் 25 நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினாா். சிகிச்சை முடிந்து திரும்பிய அவருக்கு அதிமுக மாவட்ட துணைச் செயலாளா் போந்தூா் செந்தில்ராஜன், ஒன்றியச் செயலாளா்கள் முனுசாமி, ராமச்சந்திரன் உள்ளிட்ட கட்சியினா் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com