காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை 105 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தின் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 2,834ஆக உயா்ந்துள்ளது.
இந்த மாவட்டத்தில் காஞ்சிபுரம் நகராட்சியில் 44 போ், ஊராட்சிப் பகுதியில் 5, ஸ்ரீபெரும்புதூரில் 24, படப்பையில் 4 உட்பட மொத்தம் 105 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 2,834ஆக உயா்ந்திருக்கிறது.
திருவள்ளூா் மாவட்டத்தில் 217 பேருக்கு கரோனா
திருவள்ளூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 217 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுவரை 3,356 போ் குணமடைந்து வீடு திரும்பி விட்டனா். தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,744ஆக உயா்ந்துள்ளது.