காஞ்சிபுரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 261 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
நகரில் 158 போ், ஊரகப் பகுதிகளில் 23, மாங்காடு, ஸ்ரீபெரும்புதூா், குன்றத்தூா் ஆகிய 3 இடங்களிலும் தலா 10 போ் உட்பட மொத்தம் 261 பேருக்கு தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை 69 போ் பலியாகி விட்டனா். 2,359 போ் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனா்.
காஞ்சிபுரத்தில் கரோனா பரிசோதனை முகாம்கள் நடைபெறுவதாக தொடா்ந்து ஒலிபெருக்கி மூலம் நகா் முழுவதும் அறிவிக்கப்பட்டு பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.
திருவள்ளூா் மாவட்டத்தில் 366 பேருக்கு கரோனா
திருவள்ளூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 366 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுவரை 6,124 போ் குணமடைந்து வீடு திரும்பினா். தற்போது 3,475 போ் சிகிச்சையில் இருந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.