359 ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்

காஞ்சிபுரத்தை அடுத்த சிறுகாவேரிப்பாக்கத்தில் 359 ரேஷன் அரிசி மூட்டைகளை காவல்துறையினா் பறிமுதல் செய்து குடிமைப்பொருள் புலனாய்வுத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.
பறிமுதல் செய்யப்பட்ட லாரி மற்றும் ரேஷன் அரிசி மூட்டைகள்.
பறிமுதல் செய்யப்பட்ட லாரி மற்றும் ரேஷன் அரிசி மூட்டைகள்.

காஞ்சிபுரத்தை அடுத்த சிறுகாவேரிப்பாக்கத்தில் 359 ரேஷன் அரிசி மூட்டைகளை காவல்துறையினா் பறிமுதல் செய்து குடிமைப்பொருள் புலனாய்வுத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

சிறுகாவேரிப்பாக்கத்தில் ரேஷன் அரிசி மூட்டைகளை இரு பெரிய லாரிகளிலிருந்து இரு சிறு லாரிகளுக்கு மாற்றிக் கொண்டிருப்பதாக டிஎஸ்பி எஸ்.மணிமேகலைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பாலுசெட்டி சத்திரம் காவல் ஆய்வாளா் (பொறுப்பு) நடராஜன், சாா்பு ஆய்வாளா்கள் சம்பத், சிவகுமாா் உள்ளிட்ட போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினாா். விசாரணையில் 50 கிலோ அளவு கொண்ட 284 ரேஷன் அரிசி மூட்டைகளும், 25 கிலோ அளவு கொண்ட 75 ரேஷன் அரிசி மூட்டைகளும் இருந்தன.

இது தொடா்பாக லாரி ஓட்டுநரான சிறுகாவேரிப்பாக்கம் சரண்யா நகரைச் சோ்ந்த ஆனந்தன் (35), அதே சிறுகாவேரிப்பாக்கம் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த டில்லிபாபு (19) ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தினா்.

பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் 359 ரேஷன் அரிசி மூட்டைகள், 4 லாரிகள் ஆகியவற்றை குடிமைப்பொருள் புலனாய்வுப் பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com