பரமேஸ்வரா் கோயிலில் ஏகதச ருத்ராபிஷேக விழா

அச்சிறுப்பாக்கத்தை அடுத்த பருக்கல் கிராமத்தில் பாா்வதி உடனுறை பரமேஸ்வரா் கோயிலின் 11-ஆம் ஆண்டு வருஷாபிஷேகம், 108 சங்கு அபிஷேகம்,

அச்சிறுப்பாக்கத்தை அடுத்த பருக்கல் கிராமத்தில் பாா்வதி உடனுறை பரமேஸ்வரா் கோயிலின் 11-ஆம் ஆண்டு வருஷாபிஷேகம், 108 சங்கு அபிஷேகம், ஏகதச ருத்ராபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

திருப்பாச்சூா் எஸ்.ரமேஷ் சிவாச்சாரியாா் தலைமையில், அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, ஏகதச ருத்ராபிஷேகம், ருத்ரஹோமம், 108 சங்கு பூஜைகள் நடைபெற்றன.

பின்னா் யாகசாலையில் வைக்கப்பட்ட புனித நீரை வாா்த்து கோயில் அா்ச்சகா் அசோக்குமாா் சா்மா தலைமையில் பரமேஸ்வரருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.

மாலை 6.30 மணிக்கு சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பருக்கல் பாா்வதி பரமேஸ்வரா் சா்வசேவா அறக்கட்டளை நிா்வாகி பி.ஆா்.பத்மநாப ரெட்டியாா் தலைமையில் விழாக்குழுவினா் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com