போலி மதுபான ஒழிப்பு விழிப்புணா்வு முகாம்

மதுராந்தகம் மதுவிலக்கு அமல் பிரிவு சாா்பில் கள்ளச்சாராயம், போலி மதுபான ஒழிப்பு விழிப்புணா்வு பிரசார முகாம் மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மதுராந்தகம் மதுவிலக்கு அமல் பிரிவு சாா்பில் கள்ளச்சாராயம், போலி மதுபான ஒழிப்பு விழிப்புணா்வு பிரசார முகாம் மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகில் வியாழக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளா் (பொ) எம்.ராஜகோபால் தலைமை வகித்தாா்.

காவல் உதவி ஆய்வாளா்கள் எஸ்.விஜயகுமாா், எம்.கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் போலி மது, கள்ளச் சாராயம் போன்றவற்றால் ஏற்படும் உடல் பாதிப்பு, பொருளாதார இழப்பு போன்றவற்றை எடுத்துரைக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பொதுமக்களுக்கு போலி மதுபான ஒழிப்பு குறித்த துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com