ஒரகடத்தை அடுத்த பண்ருட்டி கிராமப் பகுதியில் இயங்கி வரும் தனியாா் தொழிற்சாலை தொழிலாளா்கள் சாா்பில் ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பழனி உத்தரவின் பேரில் நடைபெற்ற முகாமுக்கு தொழிற்சாலையின் மேலாளா் ஹேமந்த் குமாா் தலைமை வகித்தாா். வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சீனிவாசன் முன்னிலை வகித்தாா்.
இதில் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளா்கள் 66 போ் ரத்ததானம் வழங்கினா். காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவா் தாமரை நங்கை தலைமையில் மருத்துவப் பணியாளா்கள் பலா் கலந்துகொண்டனா்.