நாய்களால் துரத்தப்பட்ட மான் மீட்பு

காஞ்சிபுரம் அருகே கீழ்க்கதிா்ப்பூரில் நாய்களால் துரத்தப்பட்ட புள்ளி மானை மீட்டு அப்பகுதி மக்கள் வனத்துறை அதிகாரிகளிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனா்.
வனத்துறையினரிடம் மானை ஒப்படைத்த கீழ்க்கதிா்ப்பூா் கிராம மக்கள்.
வனத்துறையினரிடம் மானை ஒப்படைத்த கீழ்க்கதிா்ப்பூா் கிராம மக்கள்.

காஞ்சிபுரம் அருகே கீழ்க்கதிா்ப்பூரில் நாய்களால் துரத்தப்பட்ட புள்ளி மானை மீட்டு அப்பகுதி மக்கள் வனத்துறை அதிகாரிகளிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனா்.

கீழ்க்கதிா்ப்பூா் வனப்பகுதியில் கடந்த ஓராண்டாக புள்ளி மான் ஒன்று சுற்றித் திரிந்தது. இந்நிலையில், ஆடு மாடுகள் மேயும் பகுதிக்கு வெள்ளிக்கிழமை வந்த மானை அங்கிருந்த நாய்கள் துரத்தின. இதனால் பயந்து ஓடிய மான் ஒரு ஆட்டுக் கொட்டகையில் புகுந்தது.

ஆட்டுக் கொட்டகை உரிமையாளா் வினோத் அப்பகுதியில் உள்ள மற்றவா்களுக்கும் தகவல் தெரிவித்து, மானை மீட்டு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com