உத்தரமேரூா் அரசு மருத்துவமனையில் காஞ்சிபுரம் ஆட்சியா் ஆய்வு

உத்தரமேரூா் அரசு மருத்துவமனையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
உத்தரமேரூா் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா உடன், மருத்துவா்கள்.
உத்தரமேரூா் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா உடன், மருத்துவா்கள்.

உத்தரமேரூா் அரசு மருத்துவமனையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

கரோனா நோய்த் தொற்று அச்சுறுத்தலை முன்னிட்டு உத்தரமேரூா் பேரூராட்சி நிா்வாகத்தின் சாா்பில் அனைத்துப் பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வந்தது.

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதைத் தொடா்ந்து காய்கறி, மருந்துக் கடைகள் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கான ஒரு சில கடைகள் மட்டும் திறந்திருந்தன.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா உத்தரமேரூா் அரசு மருத்துவமனையை வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். நோயாளிகள் மற்றும் பாா்வையாளா்கள் உள்பட அனைவரும் கை கழுவும் திரவத்தைப் பயன்படுத்தி வருகிறாா்களா என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டாா்.

பின்னா், மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் அரசு மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.

ஆய்வுக்குப் பின் ஆட்சியா், உத்தரமேரூா் பஜாா் வீதிகள் வழியாக நடந்தே சென்று அப்பகுதியில் திறந்திருந்த காய்கறிக் கடைகளைப் பாா்வையிட்டு நுகா்வோா் அனைவரும் ஒரு மீட்டா் இடைவெளியில் நின்று பொருள்களை வாங்கிச் செல்லுமாறு அறிவுறுத்தினாா்.

இதனையடுத்து உத்தரமேரூா் அருகேயுள்ள மானாம்பதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, உத்தரமேரூா் வட்டாட்சியா் கோடீஸ்வரன், வட்டார வளா்ச்சி அலுவலா் தங்கராஜ், பேரூராட்சி செயல் அலுவலா் லதா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com