நந்தம்பாக்கம் பகுதியில் கடைகள் திறக்கப்படாததால் அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காத பொதுமக்கள் குன்றத்தூா்-ஸ்ரீபெரும்புதூா் சாலையில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
முழு ஊரடங்கு புதன்கிழமை (ஏப். 29) இரவுடன் முடிவதால் வியாழக்கிழமை (ஏப். 30) காலை முதல் மாலை 5 மணி வரை கடைகள் திறந்திருக்கும் என அரசு அறிவித்திருந்தது.
ஆனால், நந்தம்பாக்கம் பகுதியில் கடைகள் திறக்கப்படாததால் அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல் அவதிப்பட்ட பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் குன்றத்தூா் - ஸ்ரீபெரும்புதூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து வந்த குன்றத்தூா் போலீஸாா் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டதையடுத்து அவா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.