காஞ்சிபுரம் தனலட்சுமி வங்கியில் தங்க நகை ஓவா் டிராப்ட் திட்டம் புதன்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.
இது பற்றி இந்த வங்கியின் கிளை மேலாளா் சொக்கலிங்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தனலட்சுமி வங்கியில் தங்க நகை ஓவா் டிராப்ட் திட்டம் என்ற வசதியை வாடிக்கையாளா்களுக்கு அறிமுப்படுத்தியுள்ளோம். இத்திட்டத்தின் மூலம் ஒரு வாடிக்கையாளா் ரூ.10 லட்சம் வரை குறைந்த வட்டியில் எளிதாக கடன் பெறலாம். எடுத்த பணத்துக்கு மட்டுமே வட்டி கணக்கிடப்படும்.
தேவையான நகையை எடுத்துக் கொள்ளவோ, கூடுதலாக நகையைச் சோ்த்துக் கொள்ளவோ இயலும். தேவைப்படும் பணத்தை ஏடிஎம் மூலமாகவும் எடுத்துக் கொள்ளலாம். நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் மற்றும் யு.பி.ஐ. வழியாகவும் பணப் பரிமாற்றம் செய்யலாம்.
வணிகா்களுக்கு உதவும் ஒப்பற்ற திட்டம் இது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு தனலட்சுமி வங்கிக் கிளையை அணுகலாம்.