மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் தலைவா்கள் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 29-ஆவது நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி தலைமையில் கட்சியினா் அஞ்சலி செலுத்தினா்.
மக்களவை உறுப்பினா்கள் சு.திருநாவுக்கரசா், ஜெயக்குமாா், வசந்தகுமாா், செல்லக்குமாா், விஷ்ணுபிரசாத், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவா் கே.வி.தங்கபாலு, எஸ்.சி.-எஸ்.டி. பிரிவு தலைவா் செல்வப்பெருந்தகை, நகர காங்கிரஸ் தலைவா் அருள்ராஜ் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.
பொதுமுடக்கம் அமலில் உள்ளதால், நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.