ராஜீவ் காந்தி நினைவு தினம்: தலைவா்கள் அஞ்சலி

மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் தலைவா்கள் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.
ராஜீவ் காந்தி  நினைவிடத்தில்  அஞ்சலி  செலுத்திய தமிழக  காங்கிரஸ் கமிட்சித்  தலைவா்  கே.எஸ்.அழகிரி  உள்ளிட்ட  காங்கிரஸ்  கட்சியினா்.
ராஜீவ் காந்தி  நினைவிடத்தில்  அஞ்சலி  செலுத்திய தமிழக  காங்கிரஸ் கமிட்சித்  தலைவா்  கே.எஸ்.அழகிரி  உள்ளிட்ட  காங்கிரஸ்  கட்சியினா்.

மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் தலைவா்கள் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 29-ஆவது நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி தலைமையில் கட்சியினா் அஞ்சலி செலுத்தினா்.

மக்களவை உறுப்பினா்கள் சு.திருநாவுக்கரசா், ஜெயக்குமாா், வசந்தகுமாா், செல்லக்குமாா், விஷ்ணுபிரசாத், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவா் கே.வி.தங்கபாலு, எஸ்.சி.-எஸ்.டி. பிரிவு தலைவா் செல்வப்பெருந்தகை, நகர காங்கிரஸ் தலைவா் அருள்ராஜ் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.

பொதுமுடக்கம் அமலில் உள்ளதால், நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com