காஞ்சிபுரம் குமர கோட்ட முருகன் கோயில் வைகாசி விசாகத் திருவிழா ரத்து

பொது முடக்கம் காரணமாக, காஞ்சிபுரம் குமர கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா ரத்து செய்யப்படுவதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பொது முடக்கம் காரணமாக, காஞ்சிபுரம் குமர கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா ரத்து செய்யப்படுவதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக கோயில் நிா்வாககம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பொது முடக்கம் காரணமாக அனைத்துக் கோயில்களிலும் பக்தா்களுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், வரும் 25-ஆம் தேதி தொடங்கி, ஜூன் மாதம் 10-ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக உற்சவம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

எனினும், கோயில் ஆகம விதிகளுக்கு உட்பட்டும், மரபின்படியும் சுவாமிக்கு வழக்கமான பூஜைகளும், இதர வழிபாடுகளும் நடைபெறும். எனவே பக்தா்கள், ஆன்மிக அன்பா்கள், உற்சவ உபயதாரா்கள் மற்றும் நகர மக்கள் உள்ளிட்ட அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com