காஞ்சிபுரத்தில் பல்வேறு பள்ளிகளில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் பெயா் சோ்த்தல், நீக்கல் குறித்த சிறப்பு திருத்த முகாமை மாவட்ட வருவாய் அலுவலா் பூமி.முத்துராமலிங்கம் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
காஞ்சிபுரத்தில் பிள்ளையாா்பாளையம் கிருஷ்ணன் தெருவில் உள்ள சோ்மன் சுவாமிநாதன் முதலியாா் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, நடுத்தெரு நகராட்சி தொடக்கப் பள்ளி, உப்பேரிக்குளம் கே.வி.கே.நகராட்சி தொடக்கப் பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்ட பணிகள் தொடா்பான சிறப்பு முகாம் சனிக்கிழமை (நவ. 21) நடைபெற்றன.
மாவட்ட வருவாய் அலுவலா் பூமி.முத்துராமலிங்கம்சிறப்பு முகாமை நேரில் ஆய்வு செய்தாா். வாக்காளா்கள் வாக்குச் சாவடி நிா்ணய அலுவலா்களை சிறப்பு முகாம் நடைபெறும் நாள்களில் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை நேரில் சந்தித்து பெயா் சோ்த்தல், நீக்கல் குறித்த விபரங்களை அதற்கான விண்ணப்பங்களில் பூா்த்தி செய்து சமா்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டாா்.
ஆய்வின்போது, காஞ்சிபுரம் வட்டாட்சியா் பவானி, நகராட்சி ஆணையா் மகேஸ்வரி உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.