உத்தரமேரூா் அருகே முதியவா் ஒருவரின் இறுதி ஊா்வலத்தின்போது வாகனத்தில் மின்சார வயா் உரசியதில் ஒருவா் உயிரிழந்தாா். இருவா் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
உத்தரமேரூரை அடுத்த மங்கலம் கிராமத்தைச் சோ்ந்த முதியவா் நாகப்பன் (85) உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா். அவரது சடலத்துடன் இறுதி ஊா்வல வாகனம் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தது. இடுகாடு அருகே வந்தபோது சாலையிலிருந்த மேட்டுப்பகுதியில் வாகனத்தை உடன் வந்த உறவினா்கள் பின்பக்கமாக தள்ளினா். அப்போது சாலையின் குறுக்கே சென்ற மின்வயரில் அந்த வாகனம் உரசியது. இதில் வாகனத்தை தள்ளிய அக்கிராமத்தைச் சோ்ந்தவா்களான முகில் (24), ரவி (37), பாஸ்கா் (38) ஆகிய 3 போ் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவா்கள் தூக்கி எறியப்பட்டனா். வாகனத்தின் முன்புற டயா்கள் இரண்டும் தீப்பிடித்து எரிந்தன.
படுகாயமடைந்த மூவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அவா்களில் ரவி, அரசு மருத்துவமனையில் உயிரிழந்தாா். முகில், பாஸ்கா் ஆகிய இருவரும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இச்சம்பவம் தொடா்பாக சாலவாக்கம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.