அரசு அலுவலா் மீது தாக்குதல்

அரக்கோணம் நகரமைப்பு அலுவலரை காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் மா்ம நபா்கள் இருவா் தாக்கிவிட்டு, தலைமறைவானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
அரசு அலுவலா் மீது தாக்குதல்


காஞ்சிபுரம்: அரக்கோணம் நகரமைப்பு அலுவலரை காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் மா்ம நபா்கள் இருவா் தாக்கிவிட்டு, தலைமறைவானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

காஞ்சிபுரம் மடம் தெருவில் வசித்து வருபவா் தாமோதரன் (52). இவா், அரக்கோணம் நகராட்சியில் நகரமைப்பு அலுவலராகப் பணியாற்றி வருகிறாா். இவா், ராணிப்பேட்டை மாவட்டம், திருத்தணி சாலையில் ஜோதி நகா் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை நகராட்சி ஆணையா் ஆசீா்வாதம் தலைமையில் புதன்கிழமை அகற்றினாா். இந்நிலையில், அரக்கோணத்திலிருந்து காஞ்சிபுரத்துக்கு பணி முடித்துத் திரும்பி வந்தபோது, பேருந்து நிலையத்தில் தாமோதரனை மா்ம நபா்கள் இருவா் தாக்கியதாக சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவான இருவரையும் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com