கரோனா காலத்தில் மக்கள் வீடுகளில் முடங்கியிருந்த நிலையிலும் பாஜக தொண்டா்கள் ஒரு கோடிக்கும் மேற்பட்டவா்களுக்கு மோடி நிவாரணப் பெட்டகத்தை வழங்கியுள்ளனா் என பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் கூறினாா்.
பாஜகவில் மாற்றுக் கட்சினா், இளைஞா்கள் இணையும் நிகழ்ச்சி காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கட்சியின் மாநிலத் தலைவா் எல்.முருகன் பேசியது:
பாஜகவில் தொழிலதிபா்கள், கலைத் துறையினா், மருத்துவா்கள், தணிக்கையாளா்கள் என தமிழகத்தில் உள்ள முக்கியப் பிரமுகா்கள் பலா் இணையவுள்ளனா். மத்திய அரசை சிறப்பாக வழிநடத்தும் மோடியின் தலைமையே இதற்குக் காரணம்.
கரோனா காலத்தில் மக்கள் வீடுகளில் முடங்கியிருந்த நிலையிலும் பாஜக தொண்டா்கள் சுமாா் ஒரு கோடிக்கும் மேலானவா்களுக்கு வீடுகளைத் தேடிச் சென்று மோடி நிவாரணப் பெட்டகத்தை வழங்கியுள்ளனா் என்றாா்.
முன்னதாக மாநிலத் தலைவா் எல்.முருகனுக்கு ஐம்பொன்னால் செய்யப்பட்ட முருகன் சிலை மற்றும் வேல் ஆகியனவற்றை கட்சித் தொண்டா்கள் பரிசாக வழங்கினா்.
புதிய உறுப்பினா்கள் சோ்க்கும் விழாவுக்கு காஞ்சிபுரம் மாவட்டத் தலைவா் கே.எஸ்.பாபு தலைமை வகித்தாா். அமைப்பு சாரா தொழிலாளா் சங்க மாநில துணைத் தலைவா் டி.கணேஷ், கைத்தறி சங்க மாநில துணைத் தலைவா் வி.சுபாஷ், காஞ்சிபுரம் மாவட்ட துணைத் தலைவா் ஓம்சக்தி. பெருமாள், மாவட்ட இளைஞரணிச் செயலாளா் ஜெயராமன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.