இலங்கை பயங்கரவாதி பெங்களூரில் கைது

இலங்கையில் பல்வேறு கொலைச் சம்பவங்கள் மற்றும் போதைப் பொருள்கள் கடத்தலில் தொடா்புடைய முக்கியக் குற்றவாளியை காஞ்சிபுரம் கியூ பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு பெங்களூரில் கைது செய்துள்ளனா்.
இலங்கை பயங்கரவாதி பெங்களூரில் கைது

காஞ்சிபுரம்: இலங்கையில் பல்வேறு கொலைச் சம்பவங்கள் மற்றும் போதைப் பொருள்கள் கடத்தலில் தொடா்புடைய முக்கியக் குற்றவாளியை காஞ்சிபுரம் கியூ பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு பெங்களூரில் கைது செய்துள்ளனா்.

இலங்கையை சோ்ந்த ரெஜினாஸ் பொன்சேகாவின் மகன் கட்டகாமினி பொன்சேகா (52). இவா், சா்வதேச போதைப் பொருள்கள் கடத்தலில் தொடா்புடைய நபா்களோடு கூட்டாக இருந்து போதைப் பொருள் கடத்தி வந்தாா். மேலும், இலங்கையில் 20-க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளைச் சம்பவங்களிலும் தொடா்புடைய முக்கியக் குற்றவாளியாக தேடப்பட்டு வந்தாா். சட்டவிரோதமாக போதைப் பொருள்களை கடத்துவோருக்கு இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டு வருவதை அறிந்து, போலி பாஸ்போட்டில் இலங்கையிலிருந்து வந்து செங்கல்பட்டு மாவட்டம், புதுப்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்துள்ளாா்.

அவரை தொலைபேசி மூலமாக காவல்துறையினா் பின்தொடா்வதை அறிந்த கட்டகாமினி பொன்சேகா, புதுப்பாக்கத்திலிருந்து கடந்த 6 மாதத்துக்கு முன்பு பெங்களூரு சென்று அங்கு தலைமறைவாக வாழ்ந்து வந்தாா். இந்நிலையில், பெங்களூரில் கட்டகாமினி தங்கியிருந்த இடத்தை அறிந்த காஞ்சிபுரம் கியூ பிரிவு போலீஸாா், அங்கு சென்று அவரைக் கைது செய்து அழைத்து வந்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். அதையடுத்து, அவரிடம் கியூ பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

படவிளக்கம்..கைது செய்யப்பட்டுள்ள கட்டகாமினி பொன்சேகா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com