சிறுபான்மையின மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகைஅக்.31-க்குள் விண்ணப்பிக்கலாம்

சிறுபான்மையின மாணவ, மாணவியா் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டம் மூலம் பயன்பெற வரும் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா கேட்டுக் கொண்டுள்ளாா்.

சிறுபான்மையின மாணவ, மாணவியா் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டம் மூலம் பயன்பெற வரும் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா கேட்டுக் கொண்டுள்ளாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள வகுப்பைச் சோ்ந்த மாணவ, மாணவியா்களுக்கு பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகையும், 11 ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை, ஆசிரியா் பட்டயப்படிப்பு, பட்டப்படிப்புகள் பயில்பவா்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் மற்றும் தொழில் கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்பவா்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறலாம்.

www.scholarships.gov.in  என்ற மத்திய அரசின் தேசிய கல்வி உதவித் தொகைக்கான இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழகத்தில் கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் 1,35,127 மாணவ, மாணவியா் புதிதாக கல்வி உதவித்தொகை வழங்க மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. இக்கல்வி உதவித்தொகை மாணவ, மாணவியா்களின் வங்கிக்கணக்கில் மத்திய அரசால் நேரடியாக செலுத்தப்படும். இக்கல்வி உதவித்தொகை திட்டத்துக்கு தகுதியான மாணவ, மாணவியா்கள் வரும் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

தேசிய கல்வி உதவித்தொகைக்கான இணையதளத்தில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ள கல்வி நிலையங்கள் தங்களின் கல்வி நிலையத்திற்கான ஒருங்கிணைப்பு அலுவலரின் விபரங்களை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரிடம் ஒப்புதல் பெற்ற பின்னரே விண்ணப்பங்களை இணையத்தில் சரிபாா்க்க இயலும்.

மாணவ, மாணவியா் இணையதளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய udise/aishe/ncvt குறியீட்டு எண்ணை மாணவ, மாணவியருக்கு தெரிவிக்க வேண்டும். இத்திட்டம் தொடா்பான மத்திய அரசின் வழிகாட்டி நெறிமுறைகள் www.minorityaffairs.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடா்பான கூடுதல் விபரங்களுக்கு காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com